- 01 కురళ్ 221
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து.
To give the poor is charity The rest is loan and vanity
కురళ్ చదవండి → - 02 కురళ్ 222
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று.
To beg is bad e'en from the good To give is good, were heaven forbid
కురళ్ చదవండి → - 03 కురళ్ 223
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள.
No pleading, \"I am nothing worth,\" But giving marks a noble birth
కురళ్ చదవండి → - 04 కురళ్ 224
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு.
The cry for alms is painful sight Until the giver sees him bright
కురళ్ చదవండి → - 05 కురళ్ 225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்.
Higher's power which hunger cures Than that of penance which endures
కురళ్ చదవండి → - 06 కురళ్ 226
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி.
Drive from the poor their gnawing pains If room you seek to store your gains
కురళ్ చదవండి → - 07 కురళ్ 227
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது.
Who shares his food with those who need Hunger shall not harm his creed
కురళ్ చదవండి → - 08 కురళ్ 228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்.
The joy of give and take they lose Hard-hearted rich whose hoarding fails
కురళ్ చదవండి → - 09 కురళ్ 229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல்.
Worse than begging is that boarding Alone what one's greed is hoarding
కురళ్ చదవండి → - 10 కురళ్ 230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை.
Nothing is more painful than death Yet more is pain of giftless dearth
కురళ్ చదవండి →