On Wealth & Statecraft › Kingship
Chapter 052
தெரிந்து வினையாடல்
On Wealth & Statecraft · Kingship
- 01 Kural 511
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.
Employ the wise who will discern The good and bad and do good turn
Read Kural → - 02 Kural 512
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை.
Let him act who resource swells; Fosters wealth and prevents ills
Read Kural → - 03 Kural 513
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு.
Trust him in whom these four you see: Love, wit, non-craving, clarity
Read Kural → - 04 Kural 514
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்.
Though tried and found fit, yet we see Many differ before duty
Read Kural → - 05 Kural 515
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
Wise able men with power invest Not by fondness but by hard test
Read Kural → - 06 Kural 516
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல்.
Discern the agent and the deed And just in proper time proceed
Read Kural → - 07 Kural 517
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.
This work, by this, this man can do Like this entrust the duty due
Read Kural → - 08 Kural 518
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல்.
His fitness for the duty scan Leave him to do the best he can
Read Kural → - 09 Kural 519
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு.
Who do duty for duty's sake Doubt them; and fortune departs quick
Read Kural → - 10 Kural 520
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு.
Worker straight the world is straight The king must look to this aright
Read Kural →