நீலமலைக் காட்டில் நிலா என்ற ஒரு குட்டி முயல் வாழ்ந்து வந்தது. நிலாவிற்கு ஒரு சிறிய குறை இருந்தது; அதன் ஒரு காது சரியாகக் கேட்காது, ஒரு கண் மட்டும் தான் நன்றாகத் தெரியும். இதைப் பார்த்து நிலாவின் பெற்றோர் எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனால் நிலாவிற்குத் தன் மீது ஒருவித பயமும் தயக்கமும் ஏற்பட்டது. 'நானும் மற்ற முயல்களைப் போல வேகமாக ஓடமாட்டேன், சரியாகப் பார்க்கவும் மாட்டேன்' என்று அது நினைத்தது.
அப்போது நிலாவின் தாத்தா ஒரு நாள் அந்த ஊருக்கு வந்தார். நிலாவின் பலவீனத்தை அவர் ஒரு குறையாகப் பார்க்கவில்லை. மாறாக, நிலா மற்ற முயல்களை விடத் தனித்துவமானது என்பதை அவர் உணர்ந்தார். நிலா ஒரு சத்தத்தைக் கேட்டால், அதன் மற்ற காது மிகத் துல்லியமாக அந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளும். அதேபோல், நிலாவின் தெளிவான கண், வெகு தொலைவில் இருக்கும் சிறிய அசைவுகளைக் கூடத் துல்லியமாகக் காட்டும்.
ஒரு நாள், அந்தக் காட்டில் வேட்டைக்காரர்கள் நுழையத் தொடங்கினர். அவர்கள் காட்டின் எல்லைகளைச் சுத்தி வளைத்து, விலங்குகளைத் துரத்தத் தொடங்கினர். காட்டில் இருந்த அனைத்து விலங்குகளும் பயந்து நடுங்கின. எங்கே போவது? எந்தப் பாதையில் சென்றால் ஆபத்து இருக்காது? என்று எல்லா விலங்குகளும் குழப்பத்தில் இருந்தன.
நிலாவின் தாத்தா ஒரு யோசனை சொன்னார், "நாம் வேட்டைக்காரர்கள் எப்போது ஓய்வெடுக்கிறார்கள், எப்போது விழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கவனித்தால் தப்பிக்கலாம்." ஆனால், மற்ற விலங்குகள்," அதை எப்படித் தெரிந்து கொள்வது? எங்கு சென்றாலும் ஆபத்துதான் இருக்கும்" என்று பயந்து கூறின.
அப்போது நிலா தைரியமாக முன்னால் வந்தது. "எனக்கு ஒரு காது கேட்காது என்பதால், எனது மற்றொரு காது மிகத் தெளிவாகக் கேட்கிறது. இடது பக்கத் திசையில் வேட்டைக்காரர்களின் காலடிச் சத்தமும், துப்பாக்கிச் சத்தமும் மிகத் தெளிவாகக் கேட்கிறது!" என்று கூறியது. பிறகு, ஒரு உயர்ந்த பாறையின் மீது ஏறி நின்று, "எனது தெளிவான கண்ணால் பார்த்தால், வலது பக்கப் பாதையில் வேட்டைக்காரர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு எந்தக் காவல் இல்லை!" என்று துணிச்சலாகச் சொன்னது.
நிலாவின் துணிச்சலைக் கண்ட விலங்குகள், அதன் பேச்சைக் கேட்டு மெதுவாக வலது பக்கப் பாதையில் நடக்கத் தொடங்கின. நிலா முன்னால் நின்று வழி காட்டியது. வேட்டைக்காரர்கள் தூங்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், அனைத்து விலங்குகளும் சத்தமில்லாமல் காட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்குச் சென்றன. n தன் குறையைத் தனது பலமாக மாற்றிய நிலாவைப் பார்த்து மற்ற விலங்குகள் வியந்தன. நிலா இப்போது தன் குறையைப் பற்றிப் பயப்படவில்லை; மாறாக, தான் மற்றவர்களுக்குப் பயன்படும் ஒரு சிறந்த நண்பன் என்பதை உணர்ந்து பெருமையுடன் வாழ்ந்தது.
பாடம்
நம்மிடம் உள்ள குறைகளைத் திறமையாகப் பயன்படுத்தினால், அவைவே நம் மிகப்பெரிய பலமாக மாறும்.